"வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைங்க”.. காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: "சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையில் வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது அனைவருக்கும் சரியான செய்தியை அனுப்பும்." என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவிடம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "விவசாயிகள்தான் நம் அனைவருக்கும் உணவை வழங்குகிறார்கள். அவர்களால்தான் நாம் சாப்பிடுகிறோம். அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். அதேநேரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் வைக்கோல்களை எரிப்பதை எப்படி ஏற்பது?
சுற்றுச்சூழலை பாதிப்பது விவசாயிகள் என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்களில் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனைவருக்கும் அனுப்பும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் உங்களிடம் இருந்தால், விவசாயிகளில் சிலரை தண்டிப்பது குறித்து நீங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஏன் இதற்கு அஞ்சுகிறீர்கள்? வைக்கோலை உயிரி எரிபொருளாகவும் பயன்படுத்தலாம் என செய்தித்தாள்களில் நான் படித்தேன். இதற்கு இன்னும் 5 வருடங்களை எடுத்துக்கொள்வதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.
பட்டாசுகளை வெடிப்பதால் டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனில், டெல்லிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? பட்டாசு வெடிக்க ஏன் மொத்த நாட்டுக்கும் தடை விதிக்கக்கூடாது என்று பி.ஆர். கவாய் இதற்கு முன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது விவசாயிகள் விஷயத்திலும் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றிற்கும் இதே போன்ற உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications