Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

நமது நாட்டில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுன்றன. இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் போது அதில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

Supreme court to give interim order in EVM-VVPAT Verification case


குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இதை எழுப்பும். இதன் காரணமாக விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

விவிபேட் வழக்கு: இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டும் அப்போது பல முக்கிய கருத்துகளை தெரிவித்தன.

குறிப்பாக தேர்தல் நடைமுறையில் புனிதம் இருக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும், தேர்தலில் தவறு எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக அனைவரும் நம்பும் நிலை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

விவிபேட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக்கோரிய வழக்கு.. தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


பரபர வாதங்கள்: மேலும், வாக்குச்சாவடி மையங்களளுக்கு விவிபேட் எப்படி ஒதுக்கப்படுகிறது.. அது அப்படி எடுத்துச் செல்லப்படுகிறது, என்று தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியது. அப்போது ஒரு கட்டத்தில் வாக்களித்த பிறகு வாக்காளர்கள் ஒப்புகை சீட்டைப் பெற முடியுமா என்று கூட நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அது வாக்காளர்களின் ரகசியத்தை சமரசம் செய்யும் என்றும் அந்த ஒப்புகை சீட்டுகளை வாக்குச்சாவடிக்கு வெளியே தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

இதையடுத்து விவிபேட் சீட்டுகளை ஏன் எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. விவிபேட் சீட்டுகளை எண்ண அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இப்போது நீதிபதிகள் ஏன் விவிபேட் சீட்டுகளை எண்ண இயந்திரங்களைப் பயன்படுத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விவிபேட் தாள்கள் மிகவும் மெல்லியதாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருப்பதால் இயந்திரங்கள் மூலம் எண்ண முடியாது என்றும் விவிபேட் சீட்டுக்கள் எண்ணுவதற்கு உருவாக்கப்பட்டது இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

நாளை தீர்ப்பு: அப்போது இரு தரப்பிலும் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதற்கிடையே விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை இப்போது நடக்கும் லோக்சபா தேர்தலுக்கும் பெருந்தும் வகையில் இருக்கலாம் என்பதால் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+