Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உன்னாவ் வழக்கு: தண்டனை சஸ்பெண்டுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் டிச.29ல் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.

Supreme Court to Hear Appeal on Dec 29 Against Suspension of Life Sentence of Kuldeep Singh Sengar In Unnao case

இதற்கிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் டெல்லிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ல் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த 23 ஆம் தேதி அன்று குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனையையும் சஸ்பெண்ட் செய்ய கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், பாதிக்கப்பட்டெ பெண் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+