மணிப்பூர் வன்முறையை அதிகரிக்க உச்சநீதிமன்றம் என்ன ஆடுகளமா? தலைமை நீதிபதி காட்டம்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறைகளை அதிகரிக்க உச்சநீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாக, ஆடுகளமாக பயன்படுத்துவதா? என தலைமை நீதிபதி சந்திரசூட் அதிருப்தி தெரிவித்தார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்கலில் ஒன்றான மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 50,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களிலும் பிற மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 2 மாதங்களாக இணையசேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தடையை நீக்க கோரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம், இணையசேவைகளை பாதி அளவு தொடர்ந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
ஆடுகளம் அல்ல: இதனிடையே மணிப்பூர் மாநில வன்முறைகள் தொடர்பான பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் நிலவரம் தொடர்பான மாநில அரசின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தை மணிப்பூர் வன்முறைகளை அதிகரிக்க பயன்படுத்தக் கூடாது. மாநில அரசு எடுக்கிற நடவடிக்கைகளைநாங்கள் கணிக்க முடியும். அதனடிப்படையில் சில உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். மணிப்பூர் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்; இதை பிரித்து பார்க்க வேண்டாம் என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட். மேலும் மணிப்பூர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் மனுதாரர்கள் வர வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் உச்சநீதிமன்றமானது மாநில சட்டம் ஒழுங்கு விவகாரத்தை கையில் எடுக்க முடியாதுவும் எனவும் சுட்டிக்காட்டினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications