அதானி குழுமம் தொடர்பான செய்திகளை வெளியிட தடையா? உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை
அதானி குழுமங்கள் தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 10-ல் நடைபெற உள்ளது.
டெல்லி: அதானி குழுமம் தொடர்பான செய்திகளை வெளியிட தடை கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடத்துகிறது.
அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் அரசியல் பெரும் கொந்தளிப்புக்கு காரணமாகிவிட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி குழும விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளன. அதானி குழுமத்துக்கும் மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்குமான தொடர்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றன.
இதனிடையே செபியின் அனுமதி இல்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் சர்மா இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தமது மனுவில், ஊடகங்கள் மிகையான செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் நாட்டின் பங்கு சந்தை வர்த்தகம் மிக மோசமாக பாதிப்படைகிறது. பங்கு சந்தையில் அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதால் நிதி இழப்பு ஏற்படுகிறது.
ஆகையால் நீதித்துறை இதில் தலையிட வேண்டும். செபியின் அனுமதி இல்லாமல் ஊடகங்கள் அதானி குழும செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இப்படி ஒரு அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications