Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதேபோல், சட்டப்பிரிவு 35-ஏ வும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Supreme Court verdict on the abrogation of Article 370 is historic says PM Modi

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நாடே உற்று நோக்கிய இந்த வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு "இறையாண்மை" என்பது கிடையாது. ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது; அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார் இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது. எனவே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: - உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நம்பிக்கை, வளர்ச்சிக்கான பெரும் அறிவிப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றம் நமது ஒற்றுமையின் சாராம்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்க் மக்களின் கனவுகளை நிறைவேற்றும் எங்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக இருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன். வளர்ச்சியின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டும் இன்றி, சட்டப்பிரிவு 370 காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பலன்கள் கிடைக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+