சுஷ்மா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. பாக். மீதான தாக்குதல் குறித்து விளக்கம்
டெல்லி: பயங்கரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் துவங்கியது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்த கூட்டம் தற்போது நடந்து வருகிறது.
இன்று விடிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது இந்திய விமானப்படை மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இப்படி தாக்குதலை நடத்துவதற்காக 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகள் மற்றும் 12 மிராஜ் ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தகர்க்கப்பட்டன
பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்தே மொத்தம் 4 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு அவை சுக்குநூறாக தகர்க்கப்பட்டன.

300 பேர்
இதில் பயங்கரவாதிகள், மற்றும் அவர்களின் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று வெளியுறவு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர்
இதையடுத்து, பாதுகாப்பு விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை குழு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அப்போது விமான படை தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்திய பாதுகாப்பு குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

சுஷ்மா சுவராஜ்
இதனிடையே விமான தாக்குதல் சம்பந்தமான விளக்கத்தை அளிக்க வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முடிவு செய்தார். அதற்காக டெல்லியில் மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கும் இன்று அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தற்போது கூட்டம் கூடியுள்ளது.

விளக்கம்
இதில், தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு சுஷ்மா விளக்கம் அளித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு குறித்த அனைத்து விஷயங்களும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications