விடாத எம்.பி.க்கள்.. வீறு கொண்ட கனிமொழி.. அமித்ஷாதான் டார்கெட்.. நாடாளுமன்றத்திலேயே தர்ணா
டெல்லி: லோக்சபாவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய நிலையில் தமிழகத்தை சேர்ந்த 7 எம்பிக்கள் உள்பட மொத்தம் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று 2 பேர் நுழைந்து ஸ்பிரே அடித்தனர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் பெண் உள்பட 2 பேர் ஸ்பிரே அடித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. இதனால் சபைகளில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபாவில் இருந்து 14 எம்பிக்கள், ராஜ்யசபாவில் இருந்து ஒரு எம்பி என மொத்தம் 15 பேர் மீதமுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, சேலம் திமுக எம்பி எஸ்ஆர் பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேசன், கோவை எம்பி பிஆர் நடராஜன், கே சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் கேரள மாநிலம் இடுக்கி தொகுதி எம்பி டீன் குரியகோஸ், எர்ணாகுளம் தொகுதி எம்பி ஹிபி ஈடன், ஆலத்தூர் தொகுதி எம்பி ரம்யா ஹரிதாஸ், திருச்சூர் தொகுதி எம்பி டிஎன் பிரதாபன், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்பி விகே ஸ்ரீகண்டன், சாளக்குடி தொகுதி காங்கிரஸ் எம்பி பென்னி பென், பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுகவை சேர்ந்த தலா 2 எம்பிக்கள், சிபிஐ கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இதன்மூலம் இன்றைய தினம் மட்டும் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து மொத்தம் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க கூறியதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சஸ்பெண்ட் நடவடிக்கை எதிர்த்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications