தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுதா? நல்ல செய்தி வருதா? மிகுந்த ஆர்வத்தில் மத்திய அரசு ஊழியர்கள்
டெல்லி: விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை போலவே, தமிழக அரசு ஊழியர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா?
வழக்கமாக, 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்பட்டு வருகிறது என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே உள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது..
2 காரணம்: ஆனாலும், விரைவில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும்.. மேலும், கடந்த முறை 2013-ல் எம்பி தேர்தலுக்கு முன்பே, 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது என்பதால், இந்த முறையும் எம்பி தேர்தலுக்கு முன்பேயே 8வது ஊதியக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

அதேபோல, இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.. எம்பி தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதுடன், மோடி அரசின் 2வது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
பட்ஜெட்: அநேகமாக, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்படலாம் என்கிறார்கள். ஒருவேளை 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோலவே, தமிழக அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.. தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியாக கடந்த அக்டோபர் மாதத்தில் 4 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இப்போது, தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீதத்திற்கான அகவிலைப்படி பலனை பெற்று வருகின்றனர்..
ஓய்வூதியதாரர்கள்: அந்தவகையில், 16 லட்சம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியத்தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
தமிழக அரசுக்கு போதுமான நிதி இல்லாத நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா? என்கிற கேள்வியும் வட்டமடிக்கிறது. அதேசமயம், பட்ஜெட் கூட்டம், தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க உள்ளதால், நிச்சயம் சாதகமான அறிவிப்புகள் என்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications