தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட்க்கும் 'லிங்க்' இருக்கிறது... வைகோ பகீர் குற்றச்சாட்டு
தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிறுவனமும் கைகோர்த்து தான் செயல்பட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிறுவனமும் கைகோர்த்து தான் செயல்பட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசியதாவது, ஸ்டெர்லைட் பிரச்சனை துப்பாக்கி சூடு பிரச்சனை வந்ததால் தான் தமிழக அரசு மூடியது. தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் கைகோர்த்து தான் செயல்பட்டன.
ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு என்பது கதைகட்டு வித்தை.13 பேர் சுட்டு கொல்லப்பட்டது, தமிழக அரசின் ஜாலியன்வாலாபாக் படுகொலை.
மேலும், அடுத்த விசாரணையின் போது, தன்னை வாதம் செய்ய விடவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன் என்றார். ஆய்வு கமிட்டி பரிந்துரை தான் செய்ய வேண்டுமே தவிர முடிவெடுக்க அதிகாரம் இல்லை.
ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என அறிக்கையில் கூற அதிகாரம் இல்லை என்றும் வைகோ கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மீண்டும் நூறுகோடி ரூபாய் தருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications