தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்.. எந்தெந்த பகுதிகள்?.. மத்திய அரசின் லிஸ்ட் இதோ!
டெல்லி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா பாதித்த 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் 207 மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால் அவை வெள்ளை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
353 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லாததால் அவர் பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிவப்பு
அது போல் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர், ஸ்ரீநகர், நாக்பூர், புனே, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாவட்டங்கள் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா இருந்தால் அது ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது. அவற்றில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அடக்கம். சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அல்லது கொரோனா பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஹாட்ஸ்பாட்
மேற்கண்ட மாவட்டங்களில் 15 பேருக்கு மேல் கொரோனா பாதித்திருப்பதால் அவை ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக கருதப்படுகிறது. அதாவது இங்கு 15 பேருக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

பச்சை மண்டலங்கள்
அது போல் சிகப்பு, வெள்ளை மண்டலங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அது போல் புதுவையும் வெள்ளை மண்டலத்தில் வருகிறது. அது போல் நாட்டில் ரேபரேலி, வாரணாசி, ஹரித்வார், கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விஜயபாஸ்கர்
இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications