பிரதமர் மோடி ஜன.27-ல் பரீக்ஷா பே சர்ச்சா - தேர்வும் தெளிவும் கலந்துரையாடல்- தமிழ்நாடு பாஜக தீவிரம்
டெல்லி: தேர்வுகள் எழுதுகிற மாணவர்களுடனான பிரதமர் மோடியின் தேர்வும் தெளிவும் என்கிற பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் பள்ளிகளில் மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜக மேற்கொண்டு வருகிறது.
தேர்வு அச்சத்தை நீக்கி மன அழுத்தம் இல்லாத வகையில் பொதுத் தேர்வு எழுதும் மனநிலையை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் பரீக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறை இணையமைச்சர்கள் அன்னபூர்ண தேவி, டாக்டர் சுபாஷ் சர்கார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தேர்வு குறித்த அச்சத்திலிருந்து வெளிவந்து அவற்றை விழாவாக கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனித்துவம் மிக்க கலந்துரையைாடல் "தேர்வு குறித்த உரையாடல் 2023" நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வு குறித்த மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி வாழ்க்கையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் என கூறியிருந்தார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையாடலை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு பாஜக சார்பில் ஓவியப்போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் பிரதமர் மோடியின் கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்க உள்ளனர். பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.என்.எஸ்.பிரசாத் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை வழங்கினார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 500 மாணவ, மாணவியர் பிரதமர் மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார். தனியார் பள்ளிகளில் பிரதமர் மோடியின் உரையாடலை வீடியோ மூலம் ஒளிபரப்பவும் தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications