டெல்லியில் ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீர் மரணம்
டெல்லி: டெல்லியில் தங்கி ஐஏஎஸ் படித்து வந்த தமிழக மாணவி திடீரென மரணடைந்துள்ளார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என கனவு இருந்தது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சியில் சேர்ந்து ஸ்ரீமதி படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீஸிடம் தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணத்தை டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
Tamilnadu student dies in Delhi as she was studying IAS by staying in a hostel. Delhi Police investigates.