போன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு
டெல்லி: இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக அண்மையில் கூறியிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
மும்பையில் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

முன்னேற்றம்
தொழில் தொடங்கி நடத்துவதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக கூறியிருந்த சந்திர சேகரன், மேலாண்மை, தொழில்நுட்பம், போட்டியை சமாளிக்கக் கூடிய திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அரசு தரணும்
அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சந்திரசேகரன் மும்பையில் பேசியிருந்தார்.

வேகமாக செல்வது
இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் அவர்களை வேகமாக செல்லுங்கள் என்று சொல்லி வந்தால் மட்டும் வளம் காண முடியாது; அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளும் முக்கியம் என்று டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் கடந்த 17ம் தேதி பேசியிருந்தார்.

நிதியமைச்சருடன் சந்திப்பு
இந்த பேச்சு பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை.

முக்கியத்துவம்
இன்னும் சில வாரங்களில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சந்திரசேகரன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications