போன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு
டெல்லி: இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக அண்மையில் கூறியிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
மும்பையில் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

முன்னேற்றம்
தொழில் தொடங்கி நடத்துவதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக கூறியிருந்த சந்திர சேகரன், மேலாண்மை, தொழில்நுட்பம், போட்டியை சமாளிக்கக் கூடிய திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அரசு தரணும்
அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் சந்திரசேகரன் மும்பையில் பேசியிருந்தார்.

வேகமாக செல்வது
இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் அவர்களை வேகமாக செல்லுங்கள் என்று சொல்லி வந்தால் மட்டும் வளம் காண முடியாது; அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளும் முக்கியம் என்று டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் கடந்த 17ம் தேதி பேசியிருந்தார்.

நிதியமைச்சருடன் சந்திப்பு
இந்த பேச்சு பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என். சந்திரசேகரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை.

முக்கியத்துவம்
இன்னும் சில வாரங்களில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சந்திரசேகரன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications