கேரளாவை புரட்டி போட்ட 'டவ் தே' புயல்.. தீவிர புயலாக மாறியது.. குஜராத் அருகே நிலைகொண்டுள்ளது!
டெல்லி: கேரளாவை புரட்டி போட்ட டவ் தே புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. குஜராத்தில் இருந்து 920 கி.மீ தெற்கு தென் கிழக்கில் டவ் தே நிலை கொண்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மக்களை தொடர்ந்து துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

டவ் தே புயல்
இது போதாதென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் டவ் தே என்ற புயல் அரபிக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயல் வருகிற 18-ம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக 6 மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது.

6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை
அதாவது கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் லட்சத்தீவு தீவுகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் இருக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

கேரளாவை புரட்டி போட்டது
திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, கோட்டயம் மற்றும் அலபுழா மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது..இந்த புயல் நேற்று உருவானபோதே கேரளாவின் கடலோரத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்கள் உளப்பட பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை மற்றும் புயல் காற்று காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.

அடித்து செல்லப்பட்ட சாலைகள்
கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலோர வீடுகளுக்குள் புகுந்தன. காசர்கோடு கடற்கரையில் இருந்த 2 மாடி கட்டிடம் அபப்டியே கடலில் விழுந்தது. திருவனந்தபுரத்தில் கடல் நீரால் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் மழை காரணமாக பல அணைகள் நிரம்பின. இடுக்கியில் உள்ள கல்லர்குட்டி, மலங்கரா மற்றும் பூதத்தங்கெட்டு அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தில் சென்றதால் அந்த அணைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கனமழை
கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த மக்களை இந்திய கடற்படையை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மீட்டனர். டவ் தே புயலால் தமிழகத்தின் கன்னியாகுமரியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் தேனி, நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் தேனி, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துளளது.

மோடி ஆலோசனை
டவ் தே புயல் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது புயலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் 'டவ் தே' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது.

12 கி.மீ வேகம்
அதாவது 'டவ் தே' புயல் தீவிர புயலாக மாறி 12 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 920 கி.மீ தெற்கு தென் கிழக்கில் டவ் தே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அதி தீவிரமாக மாறவுள்ளது. டவ் தே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத்தில் முன் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை உள்ள மாநிலங்களில் கடற்படை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications