மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்.. பிஎஸ்எப் மாஜி வீரருக்கு எதிராக பாஜக வெளியிட்ட பரபரப்பு வீடியோ
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய முன்னாள் பிஎஸ்எப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறி பாஜக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், இது பொய்யான வீடியோ என அந்த வீரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேஜ் பகதூர் யாதவ்... இவரது பெயர் உங்களில் பலரும் அறிந்ததே. 2017ம் ஆண்டு இன்டர்நெட் வைரல் இவர் வீடியோதான். எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேஜ் பகதூர் யாதவ், தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக கூறி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேஜ் பகதூர் யாதவ் செயல்பாடு, விதிமுறைகளுக்கு மாறானது என்று குற்றம்சாட்டி, அவர் எல்லை பாதுகாப்பு படையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இப்போது மீண்டும், தேஜ் பகதூர் யாதவ் செய்திகளில் அடிபடுகிறார். இதற்கு காரணம், பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறக்கப்பட்டதுதான்.

வேட்புமனு தள்ளுபடி
இருப்பினும், தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாஜக தேஜ் பகதூர் யாதவ் தொடர்பாக ஒரு பரபரப்பு வீடியோவை திடீரென வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மோடியை கொலை செய்ய, தேஜ் பகதூர் யாதவ் பேரம் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வீடியோவில் இருப்பது நான்தான்
இதுகுறித்து தேஜ் பகதூர் யாதவ் நிருபர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: வீடியோவில் இருப்பது நான்தான் என்பதை மறுக்க மாட்டேன். டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த வீடியோ 2017ம் ஆண்டு ஷூட் செய்யப்பட்டது. நான் பணியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அந்த வீடியோவை எடுத்தார்.

இடைச்செருகல்
ராணுவ வீரர்களின் நிலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நான் அப்போது பேசினேன். ஆனால், மோடி மற்றும் கொலை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவில் சில குறிப்பிட்ட பகுதிகளை, ஜோடனை செய்துள்ளார்கள். இவ்வாறு, தேஜ் பகதூர் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக அதிர்ச்சி
பாஜக செய்தித் தொடர்பாளர், நரசிம்ம ராவ் கூறுகையில், மோடியை கொலை செய்ய நகர்ப்புற மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்ததை மகாராஷ்டிரா போலீசார் கடந்த வருடம் கண்டுபிடித்தனர். இப்போது இன்னொருவர் அதுவும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரே மோடியை கொல்ல திட்டமிட்டது வெளியே வந்துவவிட்டது. ஜனநாயகம் மீது நம்பிக்கை இருந்தால் எல்லா கட்சிகளும் இந்த செயல்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications