எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்
டெல்லி: நாளை முதல் கோயில்களைத் திறக்க மத்திய அரசு தளர்வுகளை அளித்துள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் இதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
Recommended Video
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் திருப்பதி உள்ளிட்ட கோயில்கள் தாங்களாகவே பக்தர்கள் அனுமதியை ரத்து செய்தன. மார்ச் 24 -ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தவுடன் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் சுவாமிக்கு தேவையான பூஜை, புனஸ்காரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில் இந்தியாவில் சில செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தளர்வுகளை அளித்து வருகிறது.

நிர்வாகம்
அந்த வகையில் தற்போது நாளை முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து கிடைத்த இந்த உத்தரவால் பல மாநிலங்களில் கோயில் நிர்வாகத்தினர் தயார் நிலையில் உள்ளனர். குருக்கள் மாஸ்க் அணிந்தபடி சுவாமி சிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலோசனை
அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களை திறக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதே வேளையில் டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிஸா ஆகிய மாநிலங்கள் நாளைக்குள் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கோயில்களை திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என எண்ணியுள்ளன.

எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோயில்கள் திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்களின் நிர்வாகிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் கோயில்களை திறப்பது என்ற முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு
அதே நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்த போது கொரோனா தொற்றுக்கு பின்னர் கோயில்களில் அனுபவங்கள் எவ்வாறு மாறுகிறது என்பதை பார்க்க வேண்டும் என்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் கோயில்கள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications