தாபா ஃபிரீசரில் இளம் பெண் உடல்.. டெல்லியை அதிர வைத்த ஓட்டல் உரிமையாளர்.. ஷாக் பின்னணி
டெல்லியில் காதலியை கொன்று தாபாவில் உள்ள ஃப்ரீசரில் வைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்
டெல்லி: காதலியை கொன்று தாபாவில் உள்ள ஃப்ரீசரில் வைத்திருந்த தாபா உரிமையாளரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதை தட்டி கேட்டதால் ஆத்திரப்பட்டு அந்த பெண்ணை கொன்றுள்ளார் தாபா உரிமையாளர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தெற்கு டெல்லியில் உள்ள நசாப்கார்க்கை சேர்ந்தவர் சச்சின் கெலாட், இவர் டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலை தாண்டி டேட்டிங்கில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சச்சின் கெலாட், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சச்சின் கெலாட் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதனால் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால் சச்சின் கெலாட்டின் காதலி தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சச்சின் கெலாட் சில நாட்களுக்கு முன்பு கொன்றுள்ளார். அத்துடன் உடலை பிரீசரில் வைத்துள்ளார். உடல் பிரீசரில் 3 நாட்களாக இருந்த நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சச்சின் கெலாட்டின் காதலி உடலை கைப்பற்றினர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சச்சின் கெலாட்டையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பெண்ணை கொன்று ஃபிரீசரில் காதலன் வைத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications