Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணை.. ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை 5 மணி நேரங்களுக்கு பிறகு நிறைவடைந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த ஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத்துறை 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமாக பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் 2004ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு பணம் அனுப்பியதற்கு விளக்கம் அளிக்குமாறு பச்சன் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய்

அமலாக்க இயக்குனர் அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி , 2004ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அமிக் பார்ட்னர்ஸ் என்ற ஆஃப்ஷோர் நிறுவனத்தில் ஐஸ்வர்யா ராய் இயக்குநராக இணைக்கப்பட்டதாகவும், சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா இந்த நிறுவனத்தை பதிவுசெய்தது எனவும், இது 50,000 டாலர் மூலதனத்தைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.நடிகர் 2009இல் ஐஸ்வர்யாராய் நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், துபாயைச் சேர்ந்த BKR டோனிஸ் நிறுவனத்தால் அது வாங்கப்பட்டது.

அமலாக்கத்துறை சம்மன்

அமலாக்கத்துறை சம்மன்

ஐஸ்வர்யா ராய் கடந்த 15 ஆண்டுகளில் பெற்ற வெளிநாட்டுப் பணம் குறித்த பதிவேடுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சம்மன் அனுப்பபட்ட போது இரண்டு முறை கூடுதல் அவகாசம் கேட்டு ஐஸ்வர்யா ராய் மனு செய்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது இதையடுத்து ஐஸ்வர்யா ராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.

எழுப்பப்பட்ட கேள்விகள்

எழுப்பப்பட்ட கேள்விகள்

அமிக் பார்ட்னர்ஸ் என்பது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2005 இல் இணைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும் இந்த நிறுவனத்துடன் உங்களுக்கு என்ன தொடர்பு உள்ளது? , மொசாக் பொன்சேகா நிறுவனத்தை பதிவு செய்த சட்ட நிறுவனம் எது தெரியுமா? இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் நீங்கள், உங்கள் தந்தை கோடேதிராமன் ராய் கிருஷ்ணா ராய், உங்கள் தாய் கவிதா ராய் மற்றும் உங்கள் சகோதரர் ஆதித்யா ராய் ஆகியோர் அடங்குவர் இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும்? என்பது உள்ளிட்ட 8 கேள்விகள் ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மணி நேர விசாரணை முடிவு

5 மணி நேர விசாரணை முடிவு

மேற்கண்ட கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை திரட்ட முடிவு செய்துள்ளார் மேலும் அடுத்த கட்ட விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் ஆஜராக வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த ஐஸ்வர்யா ராயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால்யாரிடமும் பேசாமல் ஐஸ்வர்யா ராய் உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+