75 பேருக்கு கூடுதலாக தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 471ஆக உயர்ந்தது
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 471என்ற அளவில் உயர்ந்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட, 75 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
Recommended Video
இதுவரை சமூக தொற்று நோயாக இந்தியாவில் கொரோனா பரவவில்லை. இதை தடுக்க மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை, மக்கள் அரசு உத்தரவை கேட்காமல், வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினால், இத்தாலி, ஈரான் போல, இந்த நோய் வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
நிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்!
தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள், தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று சொல்லி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அவர்கள் வீட்டின் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.