டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேவேந்திர குல வேளாளர் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல வருடங்களாக விடுத்து வந்தனர்.

The President ramnath kovind approved the Devendra Kula Vellalar Bill

இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. பின்னர் இந்த கோரிக்கை மீது ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை .. அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்தும் முடக்கம்!மகாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை .. அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்தும் முடக்கம்!

இதனையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

English summary
The President today approved the Devendra Kula Vellalar Bill
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X