அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது செபியின் அறிக்கை
டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக 'செபி' (SEBI) ஆய்வறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில் இதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சில மாதங்களுக்கு முன்னர் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. "இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த அறிக்கை வெளிவரும் போது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ரூ.8.2 லட்சம் கோடி, அதாவது மொத்த சொத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கிறது. அதுபோல இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு காரணம் மொரிசியஸ், கரீபின் தீவு உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க போலியான போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயங்களைதான் ஹிண்டன்பர்க் விரிவாக பொதுவெளியில் வைத்தது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கி தற்போது பெரும் நஷ்டத்தில் இருக்கிறார் அதானி. இதில் அதானிக்கு மட்டும் இழப்பீடு ஏற்படவில்லை, அதானி நிறுவனத்தை நம்பி ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்திருந்தன. தற்போது அதானியே காலி எனில், இந்த நிறுவனங்களும் துடைத்தெறியப்பட்டன. இதில் வேலைப்பார்த்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அதேபோல அதானி நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளும் முதலீடு செய்யப்பட்டன. தற்போது அதானி நஷ்டமடைந்துள்ளது எனில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் நிலை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) செய்த மாற்றங்கள் காரணமாக நிபுணர் குழுவின் விசாரணை திறன் கட்டுப்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செபி இது குறித்து விசாரணையில் இறங்கியது. தனது விசாரணை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த விசாரணை அறிக்கை மீதான விரிவான விசாரணை இன்று நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 13ம் தேதி இது விசாரிக்கப்படும் என்று இருந்த நிலையில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அக்.20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல கடந்த 13ம் தேதியன்று அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications