தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்.. ஆவணங்கள் தேவையில்லை என விளக்கம்
டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் பயோமெட்ரிக் கேட்கப்படாது என்றும் மக்கள் கூறும் தகவல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
நாடு முழுவதும் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திரத்துக்குப்பின் அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது இயல்பு. அதன்படி வரும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள கணக்கெடுப்பு 8-வது கணக்கெடுப்பாக நடத்தப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரிபார்த்தல் பணி, வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என 2 கட்டங்களாக நடத்தப் பட உள்ளது.

வசதிகள் கணக்கெடுப்பு
2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டின் நிலை, குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொத்துகள் போன்றவற்றை அடையாளம் கண்டு பட்டியல் வெளியிடப்படும்.

ஒப்புதல் அளித்துள்ளது
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காக கடந்த 2010-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

13000 கோடி ஒதுக்கீடு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ரூ.3941 கோடியும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.8,754 கோடியும் என அரசு மொத்தமாக ரூ .13,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்காக பயிற்சி அளிக்ககப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆவணங்கள்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் பயோமெட்ரிக் கேட்கப்படாது என்றும் மக்கள் கூறும் தகவல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications