ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.. ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று அதன் செயற்குழு கூட்டம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் ஆரம்ப நிலையில் மட்டும் பங்கேற்று விட்டு கிளம்பிச் சென்றார் ராகுல்காந்தி.
ஆனால் திடீரென இரவு 10 மணியளவில் மீண்டும் செயற்குழு கூட்டத்திற்கு அவர் வருகை தந்தார். ராகுல் காந்தியின் வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது.
ஆனால் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே இரவு 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. இது கவலை அளிக்கிறது. எனவே பிரதமர் அம்மாநிலத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காகத் தான், நான் அவசரமாக செயற்குழுவிற்கு வந்தேன். இப்போது நான் மீண்டும் கிளம்பி செல்கிறேன். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை அவர்கள் தொடர்வார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் போராட்டம் நடத்துவதாக வெளியான ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலை, மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications