கூட்டுறவு வங்கிகள் பற்றியும் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்பாதீங்க.. ஆர்பிஐ விளக்கம்
டெல்லி: சில வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தொடர்பாக பரப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிஎம்சி வங்கி என அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு புகார் காரணமாக அடுத்த 6 மாதத்திற்கு யாருக்கும் புதிதாக கடன் வழங்கவோ புதிய பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அத்துடன் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாக்கு மேல் டெபாசிட் பணத்தை எடுக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட 9 வங்கிகள் மூடப்பட உள்ளதாக அண்மையில் வதந்தி வேகமாக பரவியது. இதற்கு அப்போதே ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தது.
எனினும் தற்போது கூட்டுறவு வங்கிகள் தொடர்பாகவும், சில வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக பல வங்கிகள் திவாலாகும் என்று வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதனால் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் மத்தியில் கவலையும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட சில வங்கிகளைப் பற்றி சில இடங்களில் வதந்திகள் பரவி உள்ளது, இதன் விளைவாக வைப்புத்தொகையாளர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.
இந்திய வங்கி முறை பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறது. மேலும் இதுபோன்ற வதந்திகளின் அடிப்படையில் பீதி அடையத் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications