சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்.. எந்தெந்த சேவைகளில் பாதிப்பு இருக்காது?
டெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
லாக் டவுன் லிஸ்ட்டில் சென்னை... ஆனால் ஒரு சிக்கல் இருக்கே
எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டாலும், தடையின்றி கிடைக்கும் பொருட்கள் இவைதான்:
- மளிகை பொருட்கள், பழம் மற்றும் காய்கறி கடைகள்
- பால் விநியோக சாவடிகள்
- சமையல் எரிவாயு விநியோகம்
- தொலைத்தொடர்பு சேவைகள்
- உணவுகளை வீட்டுக்கு கொண்டு சென்று வழங்கும் விநியோகம்
- இ-காமர்ஸ்
- வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள்
- மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்
- மிகக் குறைந்த அத்தியாவசியமான பொது போக்குவரத்து
இவற்றுக்கு பாதிப்பு இருக்காது. அரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது இருக்கும் சூழலில் மக்களின் உயிரும், மக்களின் பாதுகாப்பும்தான், மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். நோய் பரவுவதை தடுக்க இதுபோன்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The total number confirmed coronavirus cases in India climbed to 370 after fresh cases were reported from Gujarat, Tamil Nadu, Telangana, Kerala and other states. The death toll in the country is at seven after one more person died due to Covid-19 in Surat, Gujarat.
Story first published: Sunday, March 22, 2020, 20:12 [IST]