அடுத்து தடுப்பு மருந்து பெறும் மாநிலங்கள் இவை தானாம்
புதுடில்லி : இரண்டாம் கட்டமாக 7 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி, அடுத்த வாரம் துவங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளாவும் இதில் அடங்கும்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் தற்போது 12 மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 16 ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,46,598 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் பஞ்சாப், சண்டிகர், குஜராத், ஜார்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் போன்ற 7 மாநிலங்களில் அடுத்த வாரம் முதல் செலுத்தப்பட உள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பலவிதமாக தகவல்கள் பரவி வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை 123 சம்பவங்கள் நடந்துள்ளன.
தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டதாக இதுவரை 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதற்கான நேரடி காரணங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications