பவுத்தம் தழுவிய ராஜேந்தி பாலுக்கு பாராட்டு.. டெல்லியில் ஜாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற திருமாவளவன்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் தலைமையில் இன்று சாதி ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
ராஜேந்திர பால் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததாகவும் திருமாவளவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜேந்திர பால் தலைமையில் 10,000 பேர் பவுத்த மதம் தழுவிய நிலையில், திருமாவளவன் டெல்லிக்கு பயணப்பட்டு அவரை பாராட்டியுள்ளார்.

பௌத்த மதத்தில் இணைவு
தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்த ராஜேந்திர பால சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதாவது, டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பௌத்த மதத்திற்கு மாறியது போல 10,000 இந்துக்கள் தங்களை பௌத்த மத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜேந்திர பால் தலைமையில் கடந்த 5ம் நடத்தது.

நெருக்கடி
1956ல் அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டபோது வாசித்த 22 உறுதிமொழியை இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்களும் வாசித்தனர். இந்த நிகழ்ச்சி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பால் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தொடர் விமர்சனங்களை பாஜக முன்வைக்கத் தொடங்கியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த நிலையில் இந்த சர்ச்சை அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராஜினாமா
ராஜேந்திர பால் மற்றும் அவர் சார்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்று பாஜகவின் போஸ்டர் பிரசார இயக்கத்தை மேற்கொண்டனர். இந்த நெருக்கடியையடுத்து ராஜேந்திர பால் அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பாஜகவின் நெருக்கடிதான் காரணம் என்று வெளிப்படையாகவே அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை அவரது தலைமையில் மக்கள் பேரணி சென்றனர்.

சாதி ஒழிப்பு பேரணி
இந்த பேரணியில் தமிழ்நாட்டிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், "டெல்லியில் 10,000பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வை முன்னின்று நடத்திய ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால், பாஜக எதிர்ப்பையடுத்து தனது பதவியை உதறினார். அவரைச் சந்தித்துப் பாராட்டினோம். இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை நடைபெற்ற சாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications