Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவுத்தம் தழுவிய ராஜேந்தி பாலுக்கு பாராட்டு.. டெல்லியில் ஜாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் தலைமையில் இன்று சாதி ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

ராஜேந்திர பால் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததாகவும் திருமாவளவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராஜேந்திர பால் தலைமையில் 10,000 பேர் பவுத்த மதம் தழுவிய நிலையில், திருமாவளவன் டெல்லிக்கு பயணப்பட்டு அவரை பாராட்டியுள்ளார்.

 பௌத்த மதத்தில் இணைவு

பௌத்த மதத்தில் இணைவு

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்த ராஜேந்திர பால சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதாவது, டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பௌத்த மதத்திற்கு மாறியது போல 10,000 இந்துக்கள் தங்களை பௌத்த மத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜேந்திர பால் தலைமையில் கடந்த 5ம் நடத்தது.

 நெருக்கடி

நெருக்கடி

1956ல் அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டபோது வாசித்த 22 உறுதிமொழியை இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்களும் வாசித்தனர். இந்த நிகழ்ச்சி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பால் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தொடர் விமர்சனங்களை பாஜக முன்வைக்கத் தொடங்கியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த நிலையில் இந்த சர்ச்சை அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

 ராஜினாமா

ராஜினாமா

ராஜேந்திர பால் மற்றும் அவர் சார்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்று பாஜகவின் போஸ்டர் பிரசார இயக்கத்தை மேற்கொண்டனர். இந்த நெருக்கடியையடுத்து ராஜேந்திர பால் அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பாஜகவின் நெருக்கடிதான் காரணம் என்று வெளிப்படையாகவே அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை அவரது தலைமையில் மக்கள் பேரணி சென்றனர்.

 சாதி ஒழிப்பு பேரணி

சாதி ஒழிப்பு பேரணி

இந்த பேரணியில் தமிழ்நாட்டிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், "டெல்லியில் 10,000பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வை முன்னின்று நடத்திய ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால், பாஜக எதிர்ப்பையடுத்து தனது பதவியை உதறினார். அவரைச் சந்தித்துப் பாராட்டினோம். இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை நடைபெற்ற சாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+