குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு- திருமா
Recommended Video
டெல்லி: குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு என சிதம்பரம் எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார்.
இதில் இந்து, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம்கள் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறிய நிலையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்
இந்த மசோதா குறித்து சிதம்பரம் எம்பி திருமாவளவன் கூறுகையில் குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு ஆகும்.
இஸ்லாமியர்களை புறக்கணிப்பது வெளிப்படையான வெறுப்பு அரசியல். மனிதநேயமற்ற ஒடுக்குமுறை; அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என திருமாவளவன் தெரிவித்தார்.