இந்த தேர்தல் பிரச்சாரம் எப்படி இருந்தது தெரியுமா.. பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பீடு இதுதான்
டெல்லி: இந்த தேர்தல் பிரச்சாரம் ஒரு புனித பயணத்தை போன்று இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் அமைச்சரவை சகாக்களுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக இந்த அரசை வெற்றிக்கரமாக வழிநடத்தியதற்காக நன்றி கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்தியில் பேசினார்.

பயணம்
அவர் கூறுகையில் இதுவரை எத்தனையோ தேர்தல்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஏராளமான தேர்தல் பிரச்சாரங்களிலும் நான் ஈடுபட்டுள்ளேன். ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரம் எனக்கு புனித பயணத்தை போன்றதாகும்.

ஏராளம்
இந்த தேர்தலில் அரசியலை தாண்டி ஏராளமான விஷயங்கள் இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எதிர்க்கட்சியினருக்கு எதிராக மக்களே போராடியதாகவும் தேர்தல் பயணம், புனித யாத்திரை போன்று இருந்ததாகவும் பிரதமர் கூறினார்.

தகவல்
இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் பிரதமர் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் நலன்
இது போல் கேதார்நாத்- பத்ரிநாத் புனித பயணம் மேற்கொண்டிருந்த அவர் இந்த பயணமே மக்களின் நலனுக்காகத்தான் என்று தெரிவித்திருந்தார். எத்தனை வெளிநாடுகளுக்கு சென்றாலும் இது போன்ற இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications