வைகோவுக்கு எதிராக போர்க்கொடி.. சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் போன் கால்கள்!
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்திய சசிகலா புஷ்பாவுக்கு மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகள் வருகிறதாம்.
கருணாநிதிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் எப்படி அந்த விழா நடந்து கொண்டிருக்கும்போதே அஜித் எழுந்து எங்களை இதுபோன்ற விழாக்களுக்கு வரசொல்லி மிரட்டுகிறார்கள் என்று கூறினாரோ அதுபோல ஜெயலலிதா என்னை அடித்தார் என்று மாநிலங்களவையில் ஜெயலலிதாவுக்கு எதிராக முழங்கியவர் சசிகலா புஷ்பா. அதோடு ஜெயலலிதாவுக்கு எதிராக புகாரும் கொடுத்தார்.

ஜெயலலிதாவின் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு புகாரை அவர் மீது தெரிவித்தது இல்லை. தெரிவித்து விட்டு சுதந்திரமாக நடமாடியதும் இல்லை. அதற்கான தைரியமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒரு புகாரை தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இதுமட்டுமல்லாது இன்னும் பல சர்ச்சைகள் இவர் மீது உண்டு.
இளைஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வெளியில் கன்னத்தில் அடித்தது என்று பல்வேறு சர்ச்சைகள் இருந்து கொண்டே வந்துள்ளது. இது அனைத்தையும் தாண்டி டெல்லியில் சில மாதங்களுக்கு முன்னர் ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த மறுமணத்திற்கு முன்னதாக அவரது கணவர் லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்ததாகவும் தகவல் உண்டு.
இந்த நிலையில் ராமசாமி என்னையும் எனது குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டு சென்று விட்டார் என்று ராமசாமியின் மனைவி போராட்டம் நடத்தியது வேறு கதை. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தினகரனை ஆதரித்தார் சசிகலா புஷ்பா. இப்போது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். சில காலம் அமைதியாக இருந்துவந்த அவர் இப்போது திடீரென்று மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
சமீபத்தில் திமுக ஆதரவில் வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பா வைகோ எம்.பி.யாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குடியரசுத் துணைதலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சட்டப்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றாலும், தேச விரோத கருத்துகளை பேசும் வைகோவை ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்பதை அனுமதிக்ககூடாது என்று தனது கடிதத்தில் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து வைகோவின் அபிமானிகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சசிகலா புஷ்பாவுக்கு போன் போட்டு வகை வகையான வார்த்தைகளால் அர்ச்சித்து வருகிறார்களாம். இதனால் கோபமடைந்த சசிகலா புஷ்பா இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் இப்படி வெளிநாடுகளில் வந்த போன் கால்களில் சிலவற்றை அட்டென்ட் செய்து அவர்களுக்கு பதில் அளித்தது லிங்கேஸ்வரனாம்.
இவர்தான் சசிகலா புஷ்பாவின் முன்னாள் கணவர். இவரை விவாகரத்து செய்துவிட்டுதான் ராமசாமி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அதோடு சசிகலா தன்னிடம் இருந்த இரண்டு போன் நம்பர்களையும் மாற்றியுள்ளார். இப்போது புதிய எண்ணை பயன்படுத்துகிறாராம் சசிகலா புஷ்பா. ஆனால் அது தெரியாமல் பழைய எண்ணைத் தொடர்பு கொண்டவர்களுக்கு பழைய கணவர்தான் பதிலளித்துக் கொண்டுள்ளாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications