நாடாளுமன்றத்தில் எதிரொலித்த காவிரி நதிநீர், தமிழக குடிநீர் பற்றாக்குறை விவகாரம்
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் காவிரி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் இன்று வலியுறுத்தினர். காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் கர்நாடகா எம்.பிக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய போதே, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அமரச் சொன்னபோதும் பதாகைகளை ஏந்தி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.

இன்றும் லோக்சபா, ராஜ்யசபாவில் காவிரி நீர் பிரச்சனையை தமிழக எம்.பிக்கள் எழுப்பினர். ராஜ்யசபாவில் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கர்நாடகாவில் உள்ள அணைகளை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்; காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தினார். அவரது பேச்சுக்கு எதிராக கர்நாடகா எம்.பிக்கள் முழக்கமிட்டனர். அவர் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசினார். மேலும் தமிழகத்தின் நிலத்தடி நீரை மேம்படுத்துவது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கனிமொழிக்கு அனுமதி மறுப்பு
இதனிடையே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் விவரங்களை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது திமுக எம்.பி. கனிமொழி, துணை கேள்வி கேட்க முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications