10.. லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன்
டெல்லி: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை வியாழக்கிழமை தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அகற்றுவது தொடராக நிதின் கட்கரியிடம் மனு அளித்தார்.

அவர் தனது மனுவில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இந்த தகவலை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இன்று (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் மனு அளித்தேன்." என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில முக்கிய ஊர்களில் மக்கள் நுழையும் போது அவர்களிடமும் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் எல்லாம் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சொல்வது என்றால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடிக்கும், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 48 கி.மீ தான் உள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பில்லூர் அருகே அமைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், சென்னையில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைத்திருப்பார்கள்.
இன்று (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற… pic.twitter.com/9svrqtsxxn
— தமிழச்சி (@ThamizhachiTh) July 27, 2023
அப்படியே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்திவிட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றால், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். வெறும் 39 கி.மீ இடைவெளியில் இரண்டு சுங்கச்சாவடி இருக்கும். கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த சுங்கச்சாவடி அங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்தாக அதே சாலையில் வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்கும், சேலம் மாவட்டம் நத்தக்கரை சுங்கச்சாவடிக்குமான இடைவெளி 42 கி.மீ மட்டுமே இருக்கும். இப்படி தமிழ்நாடு முழுக்க அதிகமான சுங்கச்சாவடிகளை கட்டணம் வசூலிக்கும் நோக்கில் முக்கிய நகரங்களை குறிவைத்து அமைத்துள்ளார்கள்.
நிதின் கட்காரி கூற்றுப்படி 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றால் தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு மனது வைக்க வேண்டும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். மத்திய அரசு
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications