நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்... விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் உருக்கமான கடிதம்..!
டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு அவர் எழுதியுள்ள 8 பக்க கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், தாமும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன் தான் என்றும் இதனால் விவசாயிகள் படும் துயரத்தை தாம் உணர்ந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டும் சுமூக தீர்வுகாண முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய வரிகள் மட்டும் இங்கே;

விவசாயிகளுக்கு
* விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கடந்த 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
*குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டி விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன.
*குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு தயார்.

நானும் விவசாயி
* நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்; அதனால் அவர்கள் படும் துயரத்தை குழந்தை பருவத்தில் இருந்தே அறிவேன்.
* புதிய விவசாய சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது.
*குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; பொய்களை விவசாயிகளை நம்ப வேண்டாம்.

போராட்டத்துக்கு முடிவு
இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிகளில் இந்தக் கடிதமும் இன்று. இந்தியில் எழுதப்பட்டுள்ள அமைச்சரின் 8 பக்க கடிதம், போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications