டெல்லி, சுற்றிய பகுதிகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின- ரிக்டரில் 4.1 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று மாலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
டெல்லியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. கிழக்கு டெல்லியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நாடு தழுவிய லாக்டவுன் அமலில் உள்ளதால் வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலநடுக்கம் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. இது ரிக்டரில் 4.1 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications