விரைவில் எங்கும் வாக்களிக்கும் திட்டம்... அசத்தும் அரோரா
டெல்லி : நாட்டின் எந்த வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை விரைவில் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 11 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, யூட்யூப் தளத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, வாக்காளர் தினம் குறித்தும் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் பேசியதாவது: தேசிய வாக்காளர் தினம் என்பது வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் கடமையை உணர்த்துவதாகும். 2021 ம் ஆண்டின் தேசிய வாக்காளர் தின மைய கருத்தானது, வாக்காளர்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிப்பதை உறுதி செய்வதாகும்.

கொரோனா கால தேர்தல்
இதுவரை நேர்மையாகவும். வெளிப்படை தன்மையுடனும் தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு காலத்தில் மற்றொரு புதிய கோணமாக பாதுகாப்பான தேர்தலை நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்.

விறுவிறு தேர்தல் பணி
4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் எவ்வித பயமும் இன்றி, அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும்.

எங்கும் ஓட்டளிக்கலாம்
அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னை ஐஐடி.,யுடன் இணைந்து சில திட்டங்களை தயாரித்து வருகிறோம். விரைவில் நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர் வாக்கினை அளிக்கும் ரிமோட் வோட்டிங் (Remote Voting)முறையை கொண்டு வருவது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.

என்ஆர் கோரிக்கை
விரைவில் இதற்கான ஒத்திகைகள் தொடங்க உள்ளன. இதனால் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் தேர்தலில் ஓட்டளிக்க வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல கால கோரிக்கையை ஏற்று இந்த முறை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications