பாஜக எம்.பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பிய கொறடா.. நாளை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது?
முத்தலாக் தடை சட்ட மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக தற்போது பாஜகவின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு தடை விதித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனாலும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. சென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக்சபாவில் இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால் தொடர்ந்து அவசர சட்டம் இயற்றி இதை அரசு பயன்படுத்தி வருகிறது. இதை அவசர சட்டமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இனி ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் நாளை எல்லா எம்பிக்களும் மாநிலங்களவையில் இருக்க வேண்டும் என்று பாஜக கொறடா கட்சி எம்பிக்களுக்கு விப் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, தனி நபர்களை தீவிரவாதிகளாக உபா சட்டத்திருத்த மசோதா, இஸ்லாமிய பெண்களுக்கான திருமண பாதுகாப்பு மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஆகிய மசோதாக்கள் முத்தலாக் தடை சட்ட மசோதாவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்களும் நாளை பெரும்பாலும் மாநிலங்களவை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக பாஜக கொறடா தங்கள் எம்பிக்களுக்கு விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications