மேட் இன் இந்தியா ஆப்பிள் மொபைல்களுக்கு.. அமெரிக்காவில் கூடும் மவுசு! ஜாக்பாட்!
டெல்லி: சீனாவுக்கு டிரம்ப் விதித்த வரி காரணமாக, இந்தியாவில் ஆப்பிள் மொபைல் உற்பத்தியை நிறுவனம் வேகப்படுத்த இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சீனாவுக்கு 10%, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு தலா 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் இந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை 10%-25% வரை உயரும். எனவே மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தங்கள் உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள், மோட்ரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.

குறிப்பாக சீனாவில் நிறுவப்பட்டிருக்கும் ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றும் எண்ணத்தில் ஆப்பிள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி இல்லை என்பதே இதற்கு காரணம்.
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிக்சன் (Dixon) டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி, “அமெரிக்காவின் வரியால் இந்தியாவுக்கு குறுகிய கால வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான நீண்டகால வர்த்தகத்திற்கு நாம் முழுமையாக தயாராக வேண்டும். இப்படி நடந்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமானதாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே உழைப்பு சக்தி அதிகம் உள்ள நாடாக இருக்கிறது.
இந்தியாவின் கொள்ளை வகுப்பாளர்களும், தொழிற் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவற கூடாது. கிடைக்கும் வாய்ப்புக்கு ஏற்ப தொழிற் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒரு விரிவான ஒப்பந்தம் உடனடியாக அவசியமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை போட்டியாக எடுத்துக்கொண்டு நாம் நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2024ல் இந்தியாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்கள் உற்பத்தி மொத்த மொபைல் உற்பத்தியை 20.4 அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.1.77 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தியது. இது ஒரு ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனையாகும். ஆப்பிள் 65% ஏற்றுமதியையும், சாம்சங் 20% ஏற்றுமதியையும் நம்பிதான் இருக்கின்றன. சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து 15% அளவுக்கு இந்த மொபைல்கள் ஏற்றுமதியாகியுள்ளன.
இப்படி இருக்கையில் அமெரிக்காவின் நடவடிக்கையை பயன்படுத்திக்கொள்ள இந்திய எலக்ட்ரானிக் துறை அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications