அயோத்தியில் ராமர் கோவில்.. அமைத்தாச்சு அறக்கட்டளை... நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி அறிவிப்பு
டெல்லி: ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
"இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில், அயோத்தி அறக்கட்டளை குறித்து நாங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்தோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, நாங்கள் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளோம். ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்பது அறக்கட்டளையின் பெயராக இருக்கும். இது ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்கும், " என்று மோடி கூறினார்.

ராமர் கோவில் யாத்ரீகர்களுக்காக மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளோம். கோவில் பகுதிக்கு அருகிலுள்ள 67 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளைக்கு ஒதுக்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் செழித்து வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், " என்று அவர் மேலும் கூறினார்.
நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி, ராமர் கோவில் அமைக்க, அறங்காவலர் குழு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான அமைப்பு அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் ஒரு திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அறங்காவலர்கள், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது மற்றும் தேவையான, பிற விஷயங்கள் இந்த அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ராமர் கோவில் அறக்கட்டளை 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். அதில் தலித் சமூகத்தை சேர்ந்தவரும் இருப்பார். 67 ஏக்கர் நிலப்பரப்பையும், நிர்வகிக்கும் உரிமை, இந்த அறக்கட்டளைக்குத்தான் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வம் இல்லாத மற்றொரு தகவல்படி, சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, உ.பி. பாஜக அரசு 5 ஏக்கர் நிலத்தை, அயோத்தியின் மற்றொரு இடத்தில் வழங்கிவிட்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்த நிலம் இந்து அமைப்புக்கு சொந்தமானது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய மசூதியைக் கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு, அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை ஒதுக்குமாறும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்பும் இடத்தில் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications