ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் திடீர் முடக்கம்! என்ன காரணம் தெரியுமா
டெல்லி: நாட்டின் முக்கிய செய்தி ஏஜென்சிகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதில் இருந்தே பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மஸ்க் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இருப்பினும், ட்விட்டரை அதிக விலை கொடுத்து வாங்கிய மஸ்க் இதை எப்படியாவது லாபகரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காகவே அவர் இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறார்.

ப்ளூ டிக்: சமீபத்தில் கூட ப்ளூ டிக் விவகாரத்தில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. முதலில் ட்விட்டர் நிறுவனம் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அவர்கள் கணக்கை எளிதாக அடையாளம் காண ப்ளூ டிக் வழங்கியது. இருப்பினும், அதில் இருந்து வருமானம் ஈட்ட நினைத்த மஸ்க், ப்ளூ டிக் பெற 8 டாலர் கட்ட வேண்டும் என்றார். இதனால் முதல்வர் ஸ்டாலின், கோலி எனப் பல பிரபலங்களும் ப்ளூ டிக் ஆப்ஷனை இழந்தனர். இருப்பினும், சில நாட்களில் மீண்டும் ப்ளூ டிக் வந்துவிட்டது. இதுவே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
இப்படிப் பல விஷயங்களை ட்விட்டர் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே இப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தை ட்விட்டர் தனது தளத்தில் இருந்து பிளாக் செய்துள்ளது. ட்விட்டரில் இயங்க குறைந்தபட்ச வயது வரம்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி ஏஎன்ஐ கணக்கை ட்விட்டர் லாக் செய்துள்ளது.
ஏஎன்ஐ: ட்விட்டர் தளத்தில் ஏஎன்ஐ தளத்தைத் தேடினால், 'This account doesn't exist' என்றே வருகிறது. ANI ட்விட்டர் கணக்கை 13-வயது கீழே உள்ளவர் தொடங்கியதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மெயிலும் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த மெயிலில், "ட்விட்டர் கணக்கை உருவாக்க, உங்களுக்குக் குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும். இந்த வயதுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளோம். எனவே, உங்கள் ட்விட்டர் கணக்கு லாக் செய்து, ட்விட்டரில் இருந்து நீக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: இது தொடர்பாக ஏஎன்ஐ எடிட்டர் ஸ்மிதா பிரகாஷ் கூறுகையில், "சுமார் 76 லட்சம் பாலோயர்ஸ்களை கொண்ட ஏஎன்ஐ பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. 13 வயதுக்குப்பட்டோரது கணக்கு என்று சொல்லி முடக்கியுள்ளனர். கோல்டன் டிக்கை நீக்கிவிட்டு நீல நிற டிக் தரப்பட்டு கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
தெற்காசியாவின் முன்னணி மல்டிமீடியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ நிறுவனத்திற்கு இந்தியா, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் செய்தியாளர்களைக் கொண்டு இருக்கிறது.

எலான் மஸ்க்: ட்விட்டர் நிறுனம் எலான் மஸ்க் கைகளில் சென்றது இருந்து இப்படி பல பிரச்சினைகள் அதில் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. அங்கே ஆட்குறைப்பு காரணமாகப் பொறியாளர்களும் போதியளவில் இல்லாத நிலையில், ட்விட்டர் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இலக்கியம் முதல் விண்வெளி வரை: டேராடூனில் களைகட்டும் டூன் இலக்கியத் திருவிழா 2026! -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications