டெல்லி எல்லையில் போராட்டக் களத்தில் மாரடைப்பால் இரு விவசாயிகள் மரணம்
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் போராட்டக் களத்தில் இருந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இரு விவசாயிகள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி இல்லாததால் அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

இதையடுத்து எல்லையிலேயே தங்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். அவ்வாறு டிக்ரி- பஹதுர்கார் எல்லையில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் மாரடைப்பால் மரணமடைந்தார்கள். ஏற்கெனவே கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்திற்கு 100 ஆவது விவசாயிகள் ரயிலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலில் காலிபிளவர், குடைமிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், திராட்சை, ஆரஞ்ச், மாதுளை, வாழைப்பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்கள் கொண்டு செல்லப்படும்.
இந்த ரயில் அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். விவசாயிகள் கொண்டு செல்லும் பழங்கள், காய்கறிகளுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்புகள் அறிவித்துள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி போராடும் விவசாயிகளுடன் பேசினார். அப்போது அவரது கட்சி நிச்சயம் விவசாயிகளுக்கு துணையாக இருக்கும் என வாக்குறுதியளித்தார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications