நாட்டில் 24 போலி பல்கலைக் கழங்கள்...உத்தரப் பிரதேசத்தில் தான் அதிகம்...யுஜிசி தகவல்!!
டெல்லி: நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாகவும், இவற்றில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருப்பதாக யுஜிசி தெரிவிதுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கூறுகையில், ''யுஜிசி கட்டுப்பாட்டுக்குள் வராத 24 பல்கலைக் கழகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை போலி பல்கலைக் கழகங்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இதில் யாரும் சேர வேண்டாம். இவை அனைத்தும் யுஜிசியின் 1956 ஆம் ஆண்டின் சட்டத்திற்குள் வரவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இவற்றில் 7 பல்கலைக் கழகங்கள் டெல்லியிலும், 8 பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசத்திலும் இருக்கின்றன. கர்நாடகா மாநிலம் பெல்காமில் இருக்கும் பதகன்வி சர்கார் உலக திறந்தவெளி பல்கலைக் கழகம், கேரளாவில் இருக்கும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், மகாராஷ்டிராவில் இருக்கும் ராஜா அராபிக் பல்கலைக் கழகம், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசன், புதுச்சேரியில் இருக்கும் ஸ்ரீ போதி அகாடமி உயர் கல்வி ஆகியவை போலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக் கழகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், யுஜிசி அங்கீகரிக்காத எந்த நிறுவனமும் பல்கலைக் கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications