கல்லூரி மாணவர்களுக்கும்.. இனி மும்மொழி கட்டாயம்! பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு!
டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருந்தது. பள்ளிகளில் மட்டும்தான் மும்மொழி என கருதிக்கொண்டிருந்த நிலையில், இனி அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழியை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டிருக்கிறது.
இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களையும் ஒரு இந்திய மொழியை கற்க ஊக்குவிக்க வேண்டும் என்று மானியக் குழு தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டுதலில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அதனுடன் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்தும், மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழியையும் கற்க வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களும் மூன்றாவது மொழியை கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை யுஜிசி செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமான, பன்மொழித் தன்மை மேம்பாட்டிற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கும் வளர்ச்சி ஆகியவற்றுக்காக பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அதாவது, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம் எனும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் வெறுமன மற்றொரு இந்திய மொழிகளை கற்பதை தாண்டி, கலாச்சார புரிதல் பயன்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பரவலாக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களை பொறுத்தவரையில், உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை கிரெடிட் ஸ்கோர் வாயிலாக வழங்கி, மாணவர்களை கற்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரு உள்ளூர் மொழி மற்றும் அட்டை வனப்படுத்தப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகள் என குறைந்தது மூன்று மொழிகளை கற்பிக்கலாம். இந்த நிறுவனங்கள் இந்த படிப்புகளை ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் முதன்மை என மூன்று விதமாக கொடுக்கலாம்.
மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பணியாளர்களும் மூன்றாவது மொழியில் படிக்கலாம். இந்த படிப்புக்கான வயது வரம்பு 16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படிப்புகளை நேரடி மற்றும் ஆன்லைன் வாயிலாக வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications