சக்திவாய்ந்த தலைவர் மோடியால் முடியும்.. புதினுக்கு போனை போட்டு போரை நிறுத்த வேண்டும்: உக்ரைன் தூதர்
டெல்லி: ‛‛ரஷ்யாவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவர் தொடர்பு கொண்டு பேச வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பிரச்சனையில் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும்'' என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதற்கிடையே உக்ரைனில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். பிற நாடுகளை சேர்ந்தவர்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனும் பிற நாடுகளின் உதவியை கோரி வருகிறது.

மோடியின் தொடர்பு
இந்நிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‛‛ரஷ்யா உடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொள்ள வேண்டும். தற்போதைய அசாதாரணமான சூழலுக்கு ஆக்கிரமிப்பு பிரச்னையே பிரதானமாக உள்ளது.

உயிர் பலி
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் ராணுவ மையங்களை மட்டும் தாக்கியதாக ரஷ்யா பொய் கூறுகிறது. உண்மையில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். எல்லையை தாண்டி ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளன. உக்ரைன் படைகள் சார்பில் 5 ரஷ்ய விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் பங்களிப்பு
இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக உள்ளது. இது உலகளாவிய அமைப்பாகும். இந்தியாவின் ஆதரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டின் மீது சர்வாதிகார ஆட்சி செய்யும் நபர் நடத்தும் தாக்குதலை தடுக்க இந்தியா தனது உலகளாவிய பங்கை முழுமையாக ஏற்று கொள்ள வேண்டும்.

சக்தி வாய்ந்த தலைவர்
உலகில் சக்தி வாய்ந்த, மரியாதைக்குரிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ரஷ்யாவுடன் சிறப்பான உறவை கொண்டுள்ளார். எந்த தலைவர் கூறினால் புதின் கேட்பார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நரேந்திர மோடி இதில் சிறப்பான பங்களிப்பை செய்ய முடியும். ஏனென்றால் ரஷ்யாவுடன், மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அரசின் சாதகமான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இது உண்மையின் தருணம், விதியின் தருணம்" என கூறியுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications