Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கியமான நகர்வு.. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அசாமின் உல்ஃபா அமைப்பு.. அமித் ஷா பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் உல்ஃபா அமைப்பின் ராஜ்கோவா பிரிவு மத்திய அரசு மற்றும் அசாம் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அசாமை தனி நாடாக அறிவிக்க வேண்டும், அசாமின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், அசாம் மக்களுக்கான நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உல்ஃபா (ULFA - ஐக்கிய விடுதலை முன்னணி ) அமைப்பு 1979ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திப் போராடி வந்தது.

Ulfa signs memorandum with centre and assam government

1980களில் உல்ஃபா அமைப்பின் தீவிரமான செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மோதல்களில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள், உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1990ல் உல்ஃபா அமைப்பு தடை செய்யப்பட்டது. உல்ஃபா அமைப்பின் ஆயுதச் செயல்பாடு காரணமாக சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு, உல்ஃபா அமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மத்திய அரசும், அசாம் மாநில அரசும் உல்ஃபா அமைப்பினருடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. உல்ஃபா அமைப்பின் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான பிரிவினர், கிளர்ச்சி நடவடிக்கைகளை கைவிட சில கோரிக்கைகளை முன்வைத்தனர். உல்ஃபா ஆயுதக் குழுவினரின் பல்வேறு கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டதை அடுத்து, அமைதி உடன்படிக்கை டெல்லியில் இன்று கையெழுத்தானது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான கூட்டம் நடைபெற்றது. உல்ஃபா அமைப்பைச் சேர்ந்த அரபிந்த ராஜ்கோவா பிரிவின் 16 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுகுறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உல்ஃபா தொடர்பான மோதல்களால் 1979 முதல் தற்போது வரை சுமார் 10,000 உயிர்களை இழந்த நிலையில், அசாம் ஏராளமான துன்பங்களை சந்தித்துள்ளது. அசாமின் எதிர்காலத்துக்கு இது ஒரு பொன்னாள். அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவி வந்த வன்முறை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “உல்ஃபா அமைப்பு தரப்பிலும் இந்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். எங்கள் தரப்பில் ஏதாவது தவறு நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வன்முறைச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் இது” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+