பயங்கர சத்தத்துடன்.. இடிந்த 3 மாடி கட்டிடம்.. 2 பேர் பலி.. 5 பேர் உயிருடன் மீட்பு.. டெல்லி பரபரப்பு
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்
டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்...!
டெல்லியின் தெற்கு டெல்லி பகுதியில் சந்தியா நிகேந்தன் என்ற இடம் புகழ்பெற்றதாகும்.. இந்த பகுதியில்தான் ஏராளமான விஐபிக்கள் வசித்து வருகிறார்கள்..
ஏராளமான அப்பார்ட்மென்ட்கள் இந்த பகுதியில் காணப்படும்.. எந்நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பிஸியாகவும் இருக்கும்.

மதிய நேரம்
இங்குள்ள 3 மாடி கட்டிடம் ஒன்றில் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.. இன்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல, கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.. அப்போது மதிய நேரம், திடீரென எதிர்பாராத நேரத்தில், இந்த கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்தது. சின்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி டவர் D-ல் உள்ள அப்பார்ட்மென்ட்டில்தான் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.

இடிபாடுகள்
இதுதொடர்பாக அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கித்தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டார்கள்.. எனினும் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் வேலை செய்து கொண்டிருந்த மேலும் 5 கட்டிட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்..

3 மணி நேரம்
அவர்களை, பல மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த ஒருவரை மட்டும், கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. தீயணைப்பு படையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா என்று தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது..

அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த தெற்கு டெல்லி முகேஷ் சூரியன் நேரில் விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.. மேலும் நடந்த சம்பவம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்... மாவட்ட நிர்வாகம், நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பணிகளை தான் கண்காணித்து வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications