ஒன்னுமே தெரியல..அடடா இந்தியாவுக்கு இப்படியொரு சட்ட அமைச்சரா? கிரண் ரிஜூஜூ மீது கபில் சிபல் அட்டாக்
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் கொலிஜியம் நடைமுறைக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்கும் முனைப்பில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளார். இந்நிலையில் தான் மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றியும், நீதிபதிகளின் பணிகள் குறித்தும் எதுவுமே தெரியவில்லை என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில் சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கிரண் ரிஜூஜூ. இவர் சமீபத்தில் கொலிஜியம் முறையை விமர்சனம் செய்திருந்தார்.
இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் தான் உயர்நீதிமன்றங்ளின் நீதிபதிகளை பரிந்துரை செய்கின்றன.

கொலிஜியம் முறைக்கு எதிர்ப்பு
இந்த கொலிஜியத்தின் பரிந்துரையில் தான் மத்திய அரசு நீதிபதிகள் நியமனம் செய்கிறது. இந்நிலையில் தான் இந்த பரிந்துரையில் ஒரு தலைபட்சம் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு பிடித்தவர்களை நீதிபதியாக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ விமர்சனம் செய்திருந்தார். மேலும் இந்த முறையை மாற்றம் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து கூறி வருவதோடு, அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளார்.

நீதிபதிகள் காலியிடம் எவ்வளவு?
இந்நிலையில் தான் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் நீதித்துறை நியமனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‛‛உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 1,108 ஆக உள்ளது. கடந்த 9 ம் தேதி நிலவரப்படி 777 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 331 இடங்கள் (30 சதவீதம்) காலியாக உள்ளன. இதை நிரப்புவதற்கான 147 பரிந்துரைகள் உயர்நீதிமன்றங்களில் இருந்து பெறப்பட்டு அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 165 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். மேலும்ம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியத்தின் 20 பரிந்துரைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நியமனங்களுக்கு புதிய அமைப்பு
உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் 27 பேர் மட்டுமே பணியில் உள்ளன. 7 இடங்கள் காலியாக உள்ளன. நாடுமுழுவதும் மொத்தம் 5 கோடி வழக்குள் தேங்கி உள்ளன. இதனால் நீதிபதிகள் நியமனம் என்பது முக்கியமாகும். நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு குறைவான அதிகாரம் தான் உள்ளது. இருப்பினும் தேங்கிய வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் நீதிபதிகள் நியமனங்களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்படியே தொடரும்'' என்றார்.

கபில் சிபல் விமர்சனம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு எதவுவே தெரியவில்லை என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கபில் சிபல் கூறியது என்ன?
‛‛சட்ட அமைச்சர் ரிஜூஜூ. துரதிர்ஷ்டவசமானது, சட்டத்தை பற்றியும், நீதிபதிகளின் வேலைகள் பற்றியும் அறியாத ஒருவர் நமக்கு சட்ட அமைச்சராக இருக்கிறார். புதிய சட்டங்கள் கொண்டு வரும்போது சட்ட அமைச்சர் கடுமையாக உழைத்தால் நாட்டின் சட்டத்துறை சிறப்பாக செயல்படும்'' என சாடியுள்ளார்.

யார் இந்த கபில் சிபல்?
கபில் சிபல் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கிறார். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். மேலும் கூடுதல் சொலிசிடைர் ஜெனராலாகவும் பணியாற்றி இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை பொறுப்பேற்றுள்ளார். மேலும் கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியானார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அமைச்சரவையல் தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2014 தேர்தலில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ஹர்ஷவர்தனிடம் தோல்வியடைந்தார். இவர்பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications