Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூலை 14-ல் கெடு முடிவடைகிறது.. பொது சிவில் சட்டம் குறித்து 46 லட்சம் கருத்துகளை பெற்ற சட்ட ஆணையம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக ஜூலை 10-ந் தேதி வரை மொத்தம் 46 லட்சம் கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றிருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஜூலை 14-ந் தேதி கடைசி நாளாகும்.

பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடு விடுதலை அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜகா எனும் கட்சி உருவான காலந்தொட்டே அதன் முதன்மை கொள்கைகளில் ஒன்றாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறது. பொது சிவில் சட்டம் குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்தாலும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

Uniform Civil Code- Law Commission Receives 46 Lakh Responses

அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின் படி பொது சிவில் சட்டம் அவசியமானது என்கிற கருத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து 22-வது சட்ட ஆணையமானது கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியன்று, பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என முந்தைய சட்ட ஆணையம் ஆணித்தரமாக கூறிய நிலையில் சட்ட ஆணையத்தின் தற்போதைய முயற்சி கடுமையாக விமர்சிக்கப்படும் வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஜூலை 10-ந் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையத்திடம் 46 லட்சம் கருத்துகள் சென்றடைந்துள்ளன. ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை சட்ட ஆணையம் பெறும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இந்த கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன.

திமுக நிலைப்பாடு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் பொது சிவில் சட்டம் தொடர்பான தனது கருத்தை இன்று சட்ட ஆணையத்துக்கு அனுப்பியது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில், பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும். ரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல. மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+