பிரதமர் மோடியின் 'அந்த ஒற்றை அறைகூவல்தான்’ சந்திரயான்-3 வெற்றிக்கு சான்று..சொல்வது மத்திய அமைச்சரவை!
டெல்லி: நாட்டின் சந்திரயான் திட்டங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் உணர்ச்சிப்பூர்வமான தொடர்புகள் இருப்பதாகவும் சந்திரயான் 3- வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் மத்திய அமைச்சரவை தீர்மானம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் மத்திய அமைச்சரவை தீர்மான விவரம்: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் முன்மாதிரியான தலைமைக்காகவும், மனித நலன் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும் அமைச்சரவை பாராட்டுகிறது. நமது விஞ்ஞானிகளின் திறன்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும், அவரது இடைவிடாத ஊக்கமும் அவர்களின் உணர்வை எப்போதும் பலப்படுத்தியுள்ளன.

சந்திரயானுடன் தொடர்பு: ஓர் அரசின் தலைவராக தனது 22 ஆண்டுகளில், முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் பிரதமராகவும் நரேந்திர மோடி அனைத்து சந்திரயான் திட்டங்களுடனும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் இத்தகையத் திட்டத்தின் யோசனை அறிவிக்கப்பட்டபோது அவர் முதலமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபோது, இஸ்ரோவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் சென்று வாழ்த்தினார்.
சந்திரயான் -2: 2019 ஆம் ஆண்டில் சந்திரயான் -2ஐ பொறுத்தவரை, இந்தியா விண்வெளியைப் பொறுத்தவரை, நிலவின் மேற்பரப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் இருந்தபோது, பிரதமரின் சாதுர்யமான தலைமைத்துவம் விஞ்ஞானிகளின் உற்சாகத்தை உயர்த்தியது, அவர்களின் உறுதியை வலுப்படுத்தியது மற்றும் அதிக நோக்கத்துடன் இந்த பணியைத் தொடர அவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
அறிவியல் துறையும் பிரதமர் மோடியும்: பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விண்வெளித் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவில் தனியார் துறை மற்றும் நமது புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்தார். தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் சூழலை உருவாக்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை ஈர்க்கவும் விண்வெளித் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இன்-ஸ்பேஸை நிறுவுவது ஜூன் 2020 இல் தொடங்கப்பட்டது. விண்வெளி உலகில் இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கான ஒரு கருவியாக இது மாறியுள்ளது. ஹேக்கத்தான்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இளம் இந்தியர்களுக்கு பல வாய்ப்புகளைத் திறந்துள்ளது.
அந்த அறைகூவல்தான் சான்று: சந்திரயான் -3 வெற்றியில் பிரதமர் மோடி: "ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலுக்கு சந்திரயான் -3 இன் வெற்றி மிகப்பெரிய சான்றாகும். விண்வெளித் துறை இப்போது உள்நாட்டில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேலும் திறக்க உதவும். அதனால் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பளிக்கும். இது இந்திய இளைஞர்களுக்கு உலகின் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
அனைவருக்கும் பாராட்டு: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் பங்களித்த ஒவ்வொரு தனிநபரையும் இந்த அமைச்சரவைப் பாராட்டுகிறது. சந்திரயான் -3 ஆர்வம், விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்பதற்கான பிரகாசமான சான்றாகும் என்பதை ஒப்புக்கொள்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க நாட்டு மக்கள், தங்கள் இதயங்களில் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்து தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்றும் அமைச்சரவை நம்பிக்கை தெரிவிக்கிறது.
தென்பகுதி நாடுகள் முன்னேற்றம்: சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியிலிருந்து கிடைக்கும் அறிவு மனித சமுதாயத்தின் நன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி உலகம் ஒரு குடும்பம் என்ற நமது காலத்தால் அழியாத நம்பிக்கையின் உணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்தின் சுடர் எப்போதும் மற்ற இடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும். இவ்வாறு மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications