விண்ணை முட்டும் கிடுகிடு அரிசி விலை உயர்வு- திடீரென அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்த மத்திய அரசு!
டெல்லி: நாட்டின் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40%. 2021-22ம் ஆண்டில் இந்தியா 21.1 டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது.
ஆனால் இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.

இதனால் மத்திய அரசு நெல், அரிசி ஏற்றுமதிக்கு நடப்பாண்டு தடை விதிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் நெல்-அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது.
அதே நேரத்தில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்கும் எனவும் சில தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தியது.
இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுடான 1 மூட்டை பொன்னி அரிசி நேற்றைய நிலவரப்படி ரூ1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ900. பொன்னி அரிசி விலை 1 மூட்டைக்கு ரூ300 உயர்ந்தது. பொன்னி பச்சை அரிசி விலையானது ரூ1250க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ1050. அதாவது பொன்னி பச்சை அரிசி விலை ரூ200 என்ற அளவுக்கு உயர்ந்தது. பாசுமதி அரிசியின் விலை ரூ300 அளவுக்கு உயர்ந்தது. 1 மூட்டை பாசுமதி அரிசி விலை ரூ2200-ல் இருந்து ரூ2500க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வரி விதிப்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த 20% வரி விதிக்கப்பட்டதா? அல்லது அரிசி கையிருப்பில் ஏதேனும் பிரச்சனையா? என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications